Monday, September 2, 2019

37. சொல்லடி சிவசக்தி!


நல்லதோர் வீணைசெய்தே
அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி!
எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்.

பாரதியாரின் கவிதையில் 'எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்' என்ற வரியைப் படிக்கும்போது (கேட்கும்போது) எனக்குச் சற்று நெருடலாக இருக்கும். 'என்ன இது, பாரதியார் தன்னைத்தானே பெரிய அறிவாளி என்று சொல்லிக்கொள்வது போல் தொனிக்கிறதே இந்த வரி!'

இந்த வரியை பாரதியார் வேறொரு பொருளில்தான் எழுதியிருப்பார் என்று சமீபத்தில்தான் எனக்குத் தோன்றியது (என் புத்திக்கு உறைத்தது என்றும் சொல்லலாம்!)

அறிவு என்று பாரதியார் குறிப்பிடுவது அறிவாற்றலை (intelligence) அல்ல, சிந்திக்கும் திறனை.

சிந்திக்கும் திறன் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலோர் அதைப் பயன் படுத்துவதில்லை. எனவே அவர்களிடம் உள்ள இந்தச் சிந்தனை நெருப்பு சாம்பல் படிந்து நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது.  ஊதினால்தான் அடியில் நெருப்பு கனன்று கொண்டிருப்பதே தெரியும்.

ஆனால் சிந்தனைத் திறனைப் பயன்படுத்துபவர்களிடம் அந்தத் திறன் சுடர் விட்டு எரியும் நெருப்பாக இருக்கும். இதைத்தான் சுடர் விடும் நெருப்பு என்று குறிப்பிடுகிறார் பாரதியார்.

ஒருவர் தன் சிந்தனைத் திறனைச் சுடர் விடும் நெருப்பாக வைத்திருப்பாரா அல்லது நீறு பூத்த நெருப்பாக அடக்கி வைத்திருப்பாரா என்பதும் கடவுள் சித்தம்தான்.  அதனால்தான் "எனைச் சுடர் மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?" என்கிறார் பாரதியார். ('அவன் அருளால் அவன் தாள் பணிந்து' என்று ஆழ்வார்  கூறுவதற்கு ஒத்த கருத்து இது. 'கடவுளிடம் பக்தி கொள்வதற்கும் கடவுளின் அருள் வேண்டும்' என்கிறார் ஆழ்வார் ! அது போல் ஒருவர் தன் அறிவுத் திறனைச் சுடர் விடும் அளவுக்கு வைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதும் இறைவன் தீர்மானிப்பதுதான்!)

சரி, 'சுடர் மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?' என்று பாரதியார் ஏன் நொந்து கொள்கிறார்? அப்படி இருப்பது நல்ல விஷயம்தானே?

சிந்தனைத் திறனைப் பயன்படுத்தியதால்தான் பாரதியாரால் வேதங்களைப் போற்றியபோதும், மனு நீதியை நிராகரிக்க முடிந்தது. நம் பாரம்பரியம் பற்றிப் பெருமை கொண்டபோதும், சாதிப்பாகுபாடுகளைச் சாட முடிந்தது. இதனால் அவருக்கு எதிர்ப்புகளும், சங்கடங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால்தான், "என் சிந்தனையைச் சுடராக இருக்கும்படி ஏன் வைத்திருக்கிறாய்? அப்படி இல்லாவிட்டால் மற்றவர்களைப் போல் நானும் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இசைவாக நடந்து கொண்டு இந்தக் கண்டனங்களுக்கும், சங்கடங்களுக்கும் ஆளாகாமல் இருந்திருப்பேனே!' என்று அங்கலாய்க்கிறார் போலும்!

இன்றும் 'தேச நலன்,' 'மத நம்பிக்கை,' 'பாரம்பரியப்  பழக்கம்,' போன்ற ஏதாவது ஒரு முத்திரை குத்தப்பட்டு வழங்கப்படும் விஷயங்களை அனைவரும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் கேள்வி கேட்பவர்கள் அல்லது அவற்றுக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள்  தேச விரோதிகள், மத விரோதிகள், அந்நிய நாட்டுக் கைக்கூலிகள் என்றெல்லாம் வசை பாடப்படுகிறார்கள்.

சுவாரசியமான ஒரு விஷயம் என்னவென்றால் இவர்கள் INTELLECTUALS என்று முத்திரை குத்தப்பட்டு . வசை பாடப்படுகிறார்கள்! உயர்ந்த பொருள் உள்ள இந்த வார்த்தை இன்று ஒரு வசைச்சொல்லாகப் பயன்படுத்துகிறது!  பாரதியார் 'எனைச் சுடர் மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்?' என்று கடவுளிடம் நொந்து கொண்டதை இதனுடன் ஒப்பிட்டால், பாரதியாரின் மன வருத்தத்துக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.






Thursday, April 18, 2019

36. நைமிசாரண்யம், அயோத்தி, முக்திநாத் யாத்திரை - 5. காத்மாண்டு

9.4.19 இரவு போக்ராவிலிருந்து கிளம்பி, 205 கிலோமீட்டர் பயணம் செய்து 10.4.19 காலை காத்மாண்டுவுக்கு வந்து சேர்ந்தோம்.

காத்மாண்டுவில் நாங்கள் முதலில் சென்றது ஜலநாராயண் கோவிலுக்கு. இந்தக் கோவிலில் நீரின் மீது படுத்த நிலையில் விஷ்ணு காட்சி அளிக்கிறார். அருகில் லட்சுமி மந்திர் என்ற லட்சுமி கோவிலும் இருக்கிறது.

காத்மாண்டுவில் நாங்கள் தங்கியிருந்த  ஹோட்டலிலிருந்து தெரிந்த காட்சிகள்



 ஜலநாராயண் கோவில்














 லக்ஷ்மி மந்திர் 
 
ஜலநாராயண் கோவிலில் புறாக்கள் (வீடியோ)


 பிற்பகல் காத்மண்டுவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சங்குநாராயண் கோவிலுக்குச் சென்றோம். இந்த ஊர் தொலைகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துக்கள் மற்றும் புத்தர்களால் வழிபடப்படும் இந்தக் கோவில் மிகப் புராதனமானது. பல கட்டடக்கலை நுணுக்கங்களும் சிற்ப வேலைப்பாடுகளும் கொண்டது. 1979ஆம் ஆண்டு  இதை யுனெஸ்கோ நிறுவனம்  World Heritage Site என்று அங்கீகரித்தது. அதனால்தான்  இந்தக் கோவிலுக்குள் செல்ல நுழைவுக்கட்டணமாக ரூ. 150 வசூலிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது!

கோவிலின் நுழைவிலிருந்து கோவிலுக்கு சுமார் அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும். சரிவான பாதை, சில படிகள் கொண்ட பாதை. நடப்பது கடினமில்லை.

3ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது.

கோவிலுக்கு வெளியே, குளமும், சாலையும்








கோவிலின் முன்புறத்  தோற்றம்  (சந்நிதி பின்புறம் உள்ளது)



















                             சந்நிதி


கருடன் 




 சந்தா  நாராயண்  (கருட நாராயண்) (வலது)

 ஸ்ரீதர் விஷ்ணு


 முன்புறத் தோற்றம் 






















 வைகுண்ட விஷ்ணு

 கணபதி (இடது)









ஸ்ரீ கைலேஷ்வர் சிவா கோவில் (இடது)

நரசிம்மர் (வலது) 

  விஷ்ணு விக்ராந்த் (திரிவிக்கிரமர்)






சந்நிதி முன் பக்தர்கள்





 சந்நிதியின் முன்புறம்






சங்குநாராயன் கோவில் தரிசனம் முடிந்ததும் பசுபதி நாத் கோவிலுக்குச் சென்றோம். அப்போது மாலை ஆறரை மணி ஆகி விட்டது. அங்கு நடந்த ஆரத்தியை தரிசித்தோம் .


பின்னால் உயரமாகத் தெரிவது பசுபதிநாத் சந்நிதி. அதற்கு முன் ஓடும் பாக்மதி ஆற்றின் எதிர்புறத்திலிருந்து பசுபதிநாத்துக்கு ஆரத்தி காட்டப்பட்டது. வீடியோக்கள் கீழே உள்ளன.








இத்துடன் எங்கள் நைமிசாரண்யம், அயோத்தி, முக்திநாத் யாத்திரை நிறைவு பெற்றது. அடுத்த நாள் 11.4.19 காலை காத்மண்டுவிலிருந்து டெல்லி வந்து, அங்கிருந்து மாலை பெங்களூர் திரும்பினோம்.

காத்மாண்டு-டெல்லி விமானப்பயணத்தின்போது விமானத்துக்கு வெளியே தெரிந்த சில காட்சிகள்.























காத்மாண்டுவில் நான் எடுத்த புகைப்படங்களில் ஒரு சிலவற்றை எடுத்து கூகிள் தயாரித்துக் கொடுத்த வீடியோ இது!


இந்தப் பயணம் மேற்கொள்ள எனக்கு அருள் செய்த இறைவனுக்குத் தலை வணங்குகிறேன். பயணத்தை ஏற்பாடு செய்த என் மனைவியின் சகோதரர்கள், டெல்லியிலிருந்து இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்த ஸ்ரீநிவாஸா டிராவல்ஸ் திரு நரசிம்மன் ஆகியோருக்கு என் நன்றி. இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்த அனைவருக்கும் என் நன்றி.
ஓம் நமோ நாராயணாய