Thursday, April 18, 2019

36. நைமிசாரண்யம், அயோத்தி, முக்திநாத் யாத்திரை - 5. காத்மாண்டு

9.4.19 இரவு போக்ராவிலிருந்து கிளம்பி, 205 கிலோமீட்டர் பயணம் செய்து 10.4.19 காலை காத்மாண்டுவுக்கு வந்து சேர்ந்தோம்.

காத்மாண்டுவில் நாங்கள் முதலில் சென்றது ஜலநாராயண் கோவிலுக்கு. இந்தக் கோவிலில் நீரின் மீது படுத்த நிலையில் விஷ்ணு காட்சி அளிக்கிறார். அருகில் லட்சுமி மந்திர் என்ற லட்சுமி கோவிலும் இருக்கிறது.

காத்மாண்டுவில் நாங்கள் தங்கியிருந்த  ஹோட்டலிலிருந்து தெரிந்த காட்சிகள்



 ஜலநாராயண் கோவில்














 லக்ஷ்மி மந்திர் 
 
ஜலநாராயண் கோவிலில் புறாக்கள் (வீடியோ)


 பிற்பகல் காத்மண்டுவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சங்குநாராயண் கோவிலுக்குச் சென்றோம். இந்த ஊர் தொலைகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்துக்கள் மற்றும் புத்தர்களால் வழிபடப்படும் இந்தக் கோவில் மிகப் புராதனமானது. பல கட்டடக்கலை நுணுக்கங்களும் சிற்ப வேலைப்பாடுகளும் கொண்டது. 1979ஆம் ஆண்டு  இதை யுனெஸ்கோ நிறுவனம்  World Heritage Site என்று அங்கீகரித்தது. அதனால்தான்  இந்தக் கோவிலுக்குள் செல்ல நுழைவுக்கட்டணமாக ரூ. 150 வசூலிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது!

கோவிலின் நுழைவிலிருந்து கோவிலுக்கு சுமார் அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும். சரிவான பாதை, சில படிகள் கொண்ட பாதை. நடப்பது கடினமில்லை.

3ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இது.

கோவிலுக்கு வெளியே, குளமும், சாலையும்








கோவிலின் முன்புறத்  தோற்றம்  (சந்நிதி பின்புறம் உள்ளது)



















                             சந்நிதி


கருடன் 




 சந்தா  நாராயண்  (கருட நாராயண்) (வலது)

 ஸ்ரீதர் விஷ்ணு


 முன்புறத் தோற்றம் 






















 வைகுண்ட விஷ்ணு

 கணபதி (இடது)









ஸ்ரீ கைலேஷ்வர் சிவா கோவில் (இடது)

நரசிம்மர் (வலது) 

  விஷ்ணு விக்ராந்த் (திரிவிக்கிரமர்)






சந்நிதி முன் பக்தர்கள்





 சந்நிதியின் முன்புறம்






சங்குநாராயன் கோவில் தரிசனம் முடிந்ததும் பசுபதி நாத் கோவிலுக்குச் சென்றோம். அப்போது மாலை ஆறரை மணி ஆகி விட்டது. அங்கு நடந்த ஆரத்தியை தரிசித்தோம் .


பின்னால் உயரமாகத் தெரிவது பசுபதிநாத் சந்நிதி. அதற்கு முன் ஓடும் பாக்மதி ஆற்றின் எதிர்புறத்திலிருந்து பசுபதிநாத்துக்கு ஆரத்தி காட்டப்பட்டது. வீடியோக்கள் கீழே உள்ளன.








இத்துடன் எங்கள் நைமிசாரண்யம், அயோத்தி, முக்திநாத் யாத்திரை நிறைவு பெற்றது. அடுத்த நாள் 11.4.19 காலை காத்மண்டுவிலிருந்து டெல்லி வந்து, அங்கிருந்து மாலை பெங்களூர் திரும்பினோம்.

காத்மாண்டு-டெல்லி விமானப்பயணத்தின்போது விமானத்துக்கு வெளியே தெரிந்த சில காட்சிகள்.























காத்மாண்டுவில் நான் எடுத்த புகைப்படங்களில் ஒரு சிலவற்றை எடுத்து கூகிள் தயாரித்துக் கொடுத்த வீடியோ இது!


இந்தப் பயணம் மேற்கொள்ள எனக்கு அருள் செய்த இறைவனுக்குத் தலை வணங்குகிறேன். பயணத்தை ஏற்பாடு செய்த என் மனைவியின் சகோதரர்கள், டெல்லியிலிருந்து இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்த ஸ்ரீநிவாஸா டிராவல்ஸ் திரு நரசிம்மன் ஆகியோருக்கு என் நன்றி. இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்த அனைவருக்கும் என் நன்றி.
ஓம் நமோ நாராயணாய