Tuesday, July 12, 2016

15. கடவுள் நம்பிக்கை - பல நிலைகள்


பக்தி 
சிந்தனை செய் மனமே 
செய்தால் தீவினை அகன்றிடுமே 
சிவகாமி மகனை ஷண்முகனை 
சிந்தனை செய் மனமே! 
மனமே, தினமே! 

அடைக்கலம் 
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே 
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! 

பரவசம் 
நாராயண மந்த்ரம் - அதுவே 
நாளும் பேரின்பம். 

கோரிக்கை 
கேட்டதும் கொடுப்பவனே க்ருஷ்ணா க்ருஷ்ணா 
கீதையின் நாயகனே க்ருஷ்ணா, க்ருஷ்ணா! 

கெஞ்சல் 
ஆண்டவனே உன் பாதங்களை என் கண்ணீரில் நீராட்டினேன் 
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினேன். 

இயலாமை 
ஆட்டுவித்தால் ஆரொருவர் 
ஆடாதாரோ கண்ணா? 
ஆசையென்னும் தொட்டிலினிலே 
ஆடாதாரோ கண்ணா? 

வெறுப்பு 
கையளவு உள்ளம் வைத்து 
கடல் போல் ஆசை வைத்து 
விளையாடச் சொன்னானடி - அவனே 
விளையாடி விட்டானடி. 

நன்றி 
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் - ஏழை 
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான். 

புலம்பல் 
ஆண்டவன் முகத்தைப் பாக்கணும் 
அவங்கிட்டே ஒண்ணே ஒண்ணு கேக்கணும் 
ஏண்டா சாமி என்னப் படைச்சே? 
என்னைப் படைக்கையிலே என்ன நெனச்சே? 

வேதனை  
அழுதால் என்ன தொழுதால் என்ன 
நடக்கும் கதைதான் நடக்குதப்பா!

கோபம் 
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் 
... படுவான், துடித்திடுவான் 
பட்டதே போதுமென்பான். 

விரக்தி 
இறைவன் இருக்கின்றானா? 
மனிதன் கேட்கிறான் 
அவன் இருந்தால் உலகத்திலே 
எங்கே வாழ்கிறான்? 
நான் ஆத்திகனானேன் 
அவன் அகப்படவில்லை. 
நான் நாத்திகனானேன் 
அவன் பயப்படவில்லை. 

முதிர்ச்சி 
பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு 
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு 
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் 
புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்! 

நன்றி - திரைப்படப் பாடல்கள் 


No comments:

Post a Comment