Saturday, April 11, 2015

9. சாத்தான் ஓதும் வேதம்

'Extrovert,' 'Introvet' சொற்களைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். தமிழில் இவற்றுக்குச் சமமான வார்த்தைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. 'உட்புறப் பார்வை கொண்டவர்கள்,' 'வெளிப்புறப்பார்வை கொண்டவர்கள்' என்றெல்லாம் கடுமையாக மொழிமாற்றம் செய்ய விரும்பவில்லை. எளிதாகப் பொருள் விளங்க வேண்டுமானால் 'அமைதியானவர்கள்,' 'கலகலப்பானவர்கள்' என்று சொல்லலாம்.

இந்த இரண்டில் எந்த வகையாக இருப்பதிலும் சாதக பாதகங்கள் உண்டு. இந்த வகையாக இருப்பதுதான் சரி என்று வகுப்பது சரியாக இருக்காது.

பெரும்பாலானவர்கள் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பார்கள். இவர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் எந்த நிலைக்கும் மாறிக் கொள்ளலாம்!

பொதுவாக Introverts-க்கு நண்பர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள். இவர்கள் அதிக நேரம் தனிமையில் இருக்க நேரிடும். சிலர் இந்தத் தனிமையை விரும்புவார்கள். சிலர் விரும்ப மாட்டார்கள்.

தனிமையை விரும்பாதவர்கள் தனிமையிலிருந்து எப்படி விடுபடுவது என்ற கவலையிலும், மனப்போராட்டத்திலும் விரக்தி அடைவார்கள்.

தனிமையை விரும்புபவர்கள், தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு படிப்பிலோ வேறு பொழுதுபோக்குகளிலோ தங்களை ஈடுபடுத்திக்கொண்டு மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைவார்கள். இந்த அனுபவம் அவர்களை மேலும் தனிமையை நாடச் செய்யும். அவர்கள் இன்னும் தீவிரமான Introverts-ஆக மாற வாய்ப்பு உண்டு.

கலகலப்பானவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். பெரும்பாலும் மற்றவர்களுடன் இருப்பதால் இவர்களிடம் உற்சாகம், தன்னம்பிக்கை ஆகிய ஊக்கிகள் அதிகமாக இருக்கும். இவர்கள் முதுகுக்குப் பின்னே இவர்களை , 'போர்,' 'ஓட்டை வாயன்,' 'ஆளை விட மாட்டான். பேசிப் பேசியே கொன்று விடுவான்' என்றெல்லாம் சிலர் பேசலாம்.

ஆயினும் மொத்தமாகப் பார்க்கும்போது, இவர்கள்  popular-அக இருப்பார்கள். அதாவது இவர்கள் நட்பை விரும்புபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். Contacts, Network போன்ற வியாபாரத்துக்கு உதவும் சங்கதிகளை இவர்கள் நிரம்பப் பெற்றிருப்பார்கள். அதனால் இவர்கள் தங்கள் contacts-ஐ வியாபார நோக்கில் பயன்படுத்துவார்கள் என்பது பொருளல்ல.

எனக்குத் தெரிந்த பல Extrovertsகள் சுயநலம் இல்லாமல் தங்கள் contacts-ஐப் பொதுநலத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். நட்பு என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத பல Extroverts உண்டு.

நீஙல் Extrovert-ஆ Introvert-ஆ?

என் அனுபவத்தில், இந்தக் கேள்விக்குச் சட்டென்று பதில் சொல்லப் பலரும் தயங்குவார்கள். இதற்கு ஒரு முக்கியமான காரணம், இந்த இரண்டில் எதுவாக இருப்பதில் பெருமை உண்டு என்று அவர்கள் தீர்மானிக்க முடியாததால்தான்! நான் தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்தும்போது இந்தத் தயக்கத்தைப் பார்த்திருக்கிறேன்.

நான் முன்பே சொன்னதுபோல், இதில் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று எதுவும் இல்லை.

இது ஒருவரின் இயல்பான குணமாக இருக்கலாம் . ஆயினும் காலப்போகில் சூழ்நிலைகளின் தாக்கத்தினால் இந்த நிலை மாறக்கூடும்.

நான் Introvert-தான். இதனால் எனக்கு நன்மைகள், இழப்புகள் இரண்டுமே ஏற்பட்டிருக்கின்றன. இழப்புகளே அதிகம் என்பது எனது மதிப்பீடு.

சமீபத்தில் நான் படித்த ஒரு செய்திதான் இந்தப் பதிவை நான் எழுதக் காரணம்.

மர்ரே மாநிலப் பலகலைக் கழகம், வேக் வனப் பல்கலைகழகம் ஆகியவை தனிதனியே நடத்திய  ஆராய்ச்சிகளின் முடிவுகள் Extroverts-க்கே சாதகமாக இருக்கின்றன.

Fortune 1000 பட்டியலில் வரும் உலகின் மிகச் சிறந்த ஆயிரம் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளில் மிகப் பெரும்பாலோர் Extrovets-தான்.  உயர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கான வாய்ப்பு Introverts-ஐ விட Extroverts-க்கேஅதிகம் இருக்கிறது. அத்துடன் Introverts-ஐ விட Extroverts-ஆலேயே தங்கள் வேலை, சொந்த வாழ்க்கை இரண்டையும் ஒருசேர நிர்வகிக்க முடிகிறது.

இதைப் படிக்கும் உங்களில் Extroverts இருந்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம். Introvets இருந்தால், உங்களை மாற்றிக்கொள்ள முயலுங்கள். இது மிகவும் சுலபம். வாய் திறந்து அதிகம் பேச வேண்டும், அவ்வளவுதான். உளறினாலும் பரவாயில்லை. அதுவும் அதிகம் பேரிடம் பேச வேண்டும், அறிமுகம் இல்லாதவர்கள் உட்பட.

அறிமுகம் இல்லாதவர்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்ள உங்களிடம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் இருக்கிறது. அதன் பெயர் புன்னகை. நீங்கள் யாரிடமாவது பேச முயன்று அவர்கள் சரியாக பதில் சொல்லா விட்டால், 'ஓஹோ! இவர் Introvertபோலிருக்கிறது!' என்று பரிதாபப் பட்டு விட்டு, விலகி விடுங்கள்.

நான் முன்பே சொன்னபடி, நான் ஒரு Introvert. இந்தப் பதிவின் தலைப்பின் பொருள் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும்!

No comments:

Post a Comment